பெரம்பூர்: புளியந்தோப்பில் டெய்லரை கட்டையால் அடித்து பணம் பறித்த வழக்கில் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். புளியந்தோப்பு திருவிக நகர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் பாபு (50). இவர், புளியந்தோப்பு ஜாபர்கான் தெருவில் டெய்லர் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து புளியந்தோப்பு நாச்சாரம்மாள் தெரு வழியாக செல்லும்போது இவரை வழிமறித்த 3 நபர்கள் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஷேக் பாபு பணம் இல்லை என்று கூறியவுடன் அருகில் இருந்த கட்டையை எடுத்து சரமாரியாக அடித்தனர். கட்டையில் இருந்த ஆணி பலமாக ஷேக் பாபுவின் தலையில் பட்டு ரத்த காயம் ஏற்பட்டது.