பாட்னா: கால்நடைத் தீவன வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு பல்வேறு உடல் நலப்பிரச்னைகள் காரணமாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர். லாலுவின் மூத்த மகளான ரோகினி ஆச்சார்யா தனது தந்தைக்கு சிறுநீரகத்தை தானமாக தர முன்வந்தார்.இதைத் தொடர்ந்து, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்காக லாலு சமீபத்தில் சிங்கப்பூர் சென்றார்.