புதுடெல்லி: கவர்னர் பதவி ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் தலைநகர் டெல்லியில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டி ராஜா கூறுகையில்,‘நாட்டின் கூட்டாட்சி அமைப்பை பாதுகாப்பதற்கு ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும். ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிய அரசானது அரசியலமைப்பு அடித்தளங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.