பீஜிங்: சீனாவில் மக்கள் போராட்டங்களையடுத்து பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை ஓரளவு சீனா தளர்த்தியுள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த மாதம் உரும்கி என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தீ விபத்தில் 10 பேர் பலியாயினர். ஊரடங்கு கட்டுப்பாடுகளால் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக மக்கள் போராடினர். அதிபர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி போராட்டம் தீவிரமடைந்தது.