சின்னமனூர்: சின்னமனூர் அருகே கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பராமரிப்பு இல்லாததால் 7 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் 20 வீடுகள் சேதமடைந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் காலனி மக்கம் அச்சத்தில் உள்ளனர். சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு 30க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு காலனி மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் பருவமழையால் இந்த காலனியில் உள்ள 7 வீடுகள் சேதமடைந்திருந்தன.