புளியங்குடி: புளியங்குடியில் 60 அடி ஆழ கிணற்றில் தவறிவிழுந்து தத்தளித்த புள்ளிமானை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎன்.புதுக்குடி பெரிய தொண்டைமான் பரவு வயல் பகுதியில் மூக்காண்டி மகன் முத்தையா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 60 அடி ஆழ கிணறு உள்ளது. தற்போது கிணற்றில் 40 அடியில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்நிலையில் நேற்று (ஞாயிறு) புள்ளிமான் ஒன்று கிணற்றில் தவறிவிழுந்து தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடியது.