நெமிலி: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உளியநல்லூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் இயங்கி வருகிறது. இக்கட்டிடம் கட்டி சுமார் 43 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. பழமையான இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் சிமெண்ட் பூச்சுக்கள் உதிர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் விரிசல்கள் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.