வல்லம்: திருச்செந்தூரிலிருந்து புதுக்கோட்டை வழியாக தஞ்சைக்கு அரசு பஸ் நேற்றிரவு புறப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த டிரைவர் சிவா(38) பஸ்சை ஓட்டினார். தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்த கண்டக்டர் பாலமுருகன்(42) உடன் பணியிலிருந்தார். இன்று காலை தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டி சாலை அற்புதாபுரம் செக்போஸ்ட் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க பஸ்சை திருப்பி இயக்கியபோது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.