திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று ஒரே நாளில் இதுவரை 58,480 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த 16-ம் தேதி திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஞாயிற்று கிழமையான நேற்று 55,145 பேர் தரிசனம் செய்துள்ள நிலையில் இன்று இதுவரை 58,480 பேர் தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 89,737 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.