மோடி ஓய்வெடுக்க வேண்டும்: சகோதரர் சோமாபாய் பேட்டி

அகமதாபாத்: பிரதமர் மோடி நிறைய உழைப்பதால் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று அவரது சகோதரர் சோமாபாய் மோடி கூறினார். குஜராத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி, இன்று வரிசையில் நின்று வாக்களித்தார். அவரது தாய் உட்பட குடும்பத்தினரும் வாக்களித்தனர். தொடர்ந்து பிரதமர் மோடி தனது சகோதரர் சோமாபாய் மோடியை சந்தித்து சில நிமிடங்கள் பேசினார்.

இதுகுறித்து சோமாபாய் மோடி கூறுகையில், ‘கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு ஒன்றிய அரசு செய்த பணிகளை மக்களால் புறக்கணிக்க முடியாது. நாட்டுக்காக பிரதமர் மோடி நிறைய உழைக்கிறார்; அவர் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும். எனது இந்த கருத்தை அவரிடம் (மோடி) கேட்டுக் கொண்டேன்’ என்றார்.

Related Stories: