அகமதாபாத்: பிரதமர் மோடி நிறைய உழைப்பதால் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று அவரது சகோதரர் சோமாபாய் மோடி கூறினார். குஜராத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி, இன்று வரிசையில் நின்று வாக்களித்தார். அவரது தாய் உட்பட குடும்பத்தினரும் வாக்களித்தனர். தொடர்ந்து பிரதமர் மோடி தனது சகோதரர் சோமாபாய் மோடியை சந்தித்து சில நிமிடங்கள் பேசினார்.