நாளை கார்த்திகை தீபம் பூக்கள் விலை கடும் சரிவு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மதுரை, வேலூர், ஒசூர், சேலம், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து லாரிகளில் மூலம்  பூக்கள் வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி 2000 க்கும் முல்லை 900 க்கும் ஜாதி மல்லி 700க்கும் விற்பனையானது. கனகாம்பரம் 800க்கும் சம்பங்கி 300க்கும் பன்னீர்ரோஸ் 120க்கும் சாக்லேட் ரோஸ் 160க்கும் அரளி 200க்கும் சாமந்தி 150க்கும் விற்பனை செய்யப்பட்டுவந்தது. நாளை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பூக்களின் விலை குறைந்துள்ளது.

ஒரு கிலோ மல்லி 1,500க்கும் முல்லை 700க்கும் ஜாதிமல்லி 500க்கும் காட்டுமல்லி 300க்கும் கனகாம்பரம் 600க்கும் சம்பங்கி 280க்கும் சாமந்தி 100க்கும் பன்னீர் ரோஸ் 100க்கும் சாக்லெட் ரோஸ் 120க்கும் அரளி பூ 150க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து பூ மார்க்கெட் சங்க தலைவர் மூக்காண்டி கூறுகையில், “முகூர்த்த நாள் முடிந்த நிலையில் நாளை கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. ஆனால் மார்க்கெட்டில் பூக்களின் விலை குறைந்துள்ளது. அடுத்த வாரம் முகூர்த்த நாள் வருவதால்  மறுபடியும் மல்லி, முல்லை, ஜாதி மல்லி பூக்களின் விலை உயரும் வாய்ப்புள்ளது’ என்றார்.

Related Stories: