மதுரை கள்ளழகர் கோயில் நிலத்தை ரூ.34 கோடிக்கு விற்பதாக மோசடி செய்த கொடைக்கானல் பாஜக நிர்வாகி கைது..!!

மதுரை: மதுரை கள்ளழகர் கோயில் நிலத்தை ரூ.34 கோடிக்கு விற்பதாக மோசடி செய்த கொடைக்கானல் பாஜக நிர்வாகி சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகரை சேர்ந்த ரங்கநாயகிக்கு 12.7 ஏக்கர் நிலத்தை விற்பதாக சதீஷ், அவரது தந்தை பத்மநாபன் உள்ளிட்டோர் கூறி உள்ளனர். நிலத்தை கிரயம் செய்வதற்காக ரங்கநாயகியிடம் சதீஷ், அவரது தந்தை பத்மநாபன் உள்ளிட்டோர் ரூ.70 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் விற்பதாக கூறிய நில ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அது மதுரை கள்ளழகர் கோயிலுக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து முன்பணமாக கொடுத்த ரூ.70 லட்சத்தை திருப்பு தரும்படி ரங்கநாயகி கேட்டுள்ளார்.

நீதிபதி என கூறி மிரட்டிய பாஜக நிர்வாகியின் தந்தை:

பணத்தை திருப்பி தர மறுத்த பாஜக நிர்வாகியின் தந்தையான பத்மநாபன், தான் ஓய்வு பெற்ற நீதிபதி என கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பி தர மறுத்ததால் பத்மநாபன், சதீஷ்குமார், சுமதி, அங்குராஜ், சந்திரன், குழந்தைச்செல்வம் மீது ரங்கநாயகி போலீசில் புகார் அளித்துள்ளார்.

மதுரையில் பதுங்கிய கொடைக்கானல் பாஜக நிர்வாகி கைது:

விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கொடுக்கப்பட்ட புகாரில் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அடுத்து 6 பேரும் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரினர். முன்ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில் மதுரையில் பதுங்கியிருந்த பாஜக நிர்வாகியான சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: