சென்னை: ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் வரைபடம் உள்ளிட்டவற்றுடன் தமிழக அரசு
பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. ஜல்லிக்கட்டு போட்டிகள் முழுமையாக கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.