சோலாப்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் அக்லூஜின் மல்சிராஸ் தாலுகாவைச் சேர்ந்த சிறுதொழில் தொழிலதிபர் அதுல் என்ற இளைஞருக்கும், மும்பையை சேர்ந்த பட்டதாரி சாகோதரிகள் இருவரான ரிங்கி மற்றும் பிங்கி ஆகியோருக்கு, ஒரே மேடையில் திருமணம் நடந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இவ்விவகாரம் தொடர்பாக ராகுல் என்பவர் அக்லுஜ் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மணமகன் மற்றும் 2 மணமகள்களின் திருமணம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் ஐபிசி பிரிவு 494ன் கீழ் அக்லுஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.