சண்டிகர்: பஞ்சாபின் பசில்கா மாவட்டத்தில் சுரிவாலா கிராமம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு எல்லைப்பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய பிராந்தியத்திற்குள் டிரோன் வரும் சத்தத்தை கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து உஷாரான வீரர்கள் டிரோன் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து டிரோன் திரும்ப சென்றுள்ளது. ஆனால் டிரோனில் இருந்து வீசப்பட்ட பொருட்களை எடுத்து செல்வதற்காக அந்த இடத்தில் அடையாளம் தெரியாத கும்பல் நடமாடியுள்ளது.