சந்திராபூர்: மகாராஷ்டிரா வனப்பகுதியில் தாய் புலியைத் தொடர்ந்து 4 குட்டிகளையும் ஆண் புலி கொன்றது. மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் வனப்பகுதியில் உள்ள தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தில் நேற்று 4 குட்டிப்புலிகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து காப்பகத்தின் தலைமை வன பாதுகாவலர் ஜிதேந்திரா ராம்கயோன்கர் கூறுகையில், ‘‘ஷிவ்னி வனப்பகுதியில் 4 குட்டிகள் இறந்து கிடந்தன. அவற்றில் 2 ஆண்கள், 2 பெண் குட்டிகள். அனைத்திற்கும் 3 முதல் 4 வயது இருக்கும். அதன் உடலில் புலியின் நக காயங்கள் உள்ளன’’ என்றார்.