சென்னை: தமிழகத்தில் உள்ள ஊர்க்காவல் படை பணி நாட்களை மாதத்தில் 5 நாட்களாக குறைத்து 2017ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ஊர்க் காவல் படையை சேர்ந்த அந்தோணி தாஸ் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ஊர்க்காவல் படையினருக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் மாதத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே தாங்களுக்கு பணி வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.