வடசென்னை அனல் மின்நிலைய 5 அலகுகளிலும் மின் உற்பத்தி

சென்னை: வடசென்னை அனல் மின் நிலைய 5 அலகுகளிலும் மின் உற்பத்தி தொடங் கியுள்ளது. சென்னை அருகே அத்திப்பட்டில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள  2வது நிலையின் 1வது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வடசென்னை அனல் மின் நிலைய 5அலகுகளிலும் 1830 மெகாவாட், வல்லூர் அனல் மின் நிலைய 3 அலகுகளிலும் 1500 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

Related Stories: