பெரியபாளையம் அருகே ராக்கெட் லாஞ்சர் பறிமுதல்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே மாளந்தூர் கிராமத்தில் ராக்கெட் லாஞ்சர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரியபாளையம் அருகே மாளந்தூர் கிராமத்தில்  மொண்டிக்காடு மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில்  நேற்று  காலை மகாத்மாகாந்தி தேசியஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது  சுமார் 1 1/2 அடி நீளம் உள்ள ஒரு பொருள் கிடந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை ஆய்வு  செய்தபோது அது ராணுவத்துக்கு பயன்படுத்தப்பட்ட பழைய ராக்கெட் லாஞ்சர் என்று தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பெரியபாளையம் போலீசாரும் ஊத்துக்கோட்டை  வருவாய் துறையினரும் சென்று விசாரணை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ராக்கெட் லாஞ்சர் எப்படி வந்தது என்று போலீசார் விசாரிக்கின்றனர். இதன்காரணமாக மாளந்தூர் கிராமத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கும்மிடிப்பூண்டி பகுதியிலும் கடந்த 2 வருடத்துக்கு முன்பு பெரியபாளையம் அருகே பாலேஸ்வரம் பகுதியிலும் ராக்கெட் லாஞ்சர் கிடைத்தது. மாளந்தூர் பகுதியில் பல வருடங்களுக்கு முன் ராணுவ பயிற்சி  முகாம் நடத்தப்பட்து என்று அப்பகுதியை சேர்ந்த முதியவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்படுகிறது.

Related Stories: