விழுப்புரம்: விழுப்புரம் அண்ணா நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி, கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் சத்யா. இவர், நரையூரைச் சேர்ந்த அஜித் என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். அஜித்துடன் அவரது வீட்டில் சத்யா வசித்து வந்துள்ளார். இதனிடையே தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில், அஜித் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரூ.50 ஆயிரம் பணத்தை மாமியார் வீட்டில் வாங்கி வருமாறு சத்யாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.