×

காதல் திருமணம் செய்த பெண் மர்ம சாவு

விழுப்புரம்: விழுப்புரம் அண்ணா நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி, கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் சத்யா. இவர், நரையூரைச் சேர்ந்த அஜித் என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். அஜித்துடன் அவரது வீட்டில் சத்யா வசித்து வந்துள்ளார். இதனிடையே தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில், அஜித் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரூ.50 ஆயிரம் பணத்தை மாமியார் வீட்டில் வாங்கி வருமாறு சத்யாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சத்யாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி புதுச்சேரியில் மதடிப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சத்யா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.சத்யாவின் தந்தை கலியமூர்த்தி, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து  போலீசார் சந்தேக பிரிவின் கீழ் விசாரிக்கின்றனர்.

Tags : Love marriage, mysterious death of woman,
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்