திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு விநாயகர் கோயில் தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விநாயகர் தேரினை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். விநாயகர் தேரோட்டத்தை தொடர்ந்து முருகன், அண்ணாமலையார், அம்மன், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெற உள்ளது. அம்மன் தேரை பெண்கள் மட்டும் இழுப்பார்கள், சண்டிகேஸ்வரர் தேரை சிறுவர், சிறுமிகள் இழுப்பார்கள்.