கடலூர்: கடலூர் வன்னியர்பாளையத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகள் விஜயதர்ஷினி (17). இவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். விஜயதர்ஷினி அடிக்கடி செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை தமிழரசன் கண்டித்துள்ளார். மனமடைந்த விஜயதர்ஷினி, வீட்டில் உள்ள அறைக்கு சென்று புடவையால் தூக்கு போட்டு கொண்டார்.