×

உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி சமக மனு

சென்னை: தமிழகம் முழுவதும் டிசம்பர் 3ம் தேதி போதை விழிப்புணர்வுக்காக ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த நடிகர் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக அனுமதி அளிக்க கோரி தமிழக டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டது. காவல்துறை அனுமதி அளிக்காததால் உண்ணாவிரதத்திற்கு அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி அக்கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. மாவட்ட வாரியாக அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பரிசீலித்து, உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்குகளை முடித்து வைத்தார்.

Tags : Samaka , Samaka petition seeking permission to fast
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி...