×

உதவி பேராசிரியர்கள் நியமனம்; பழைய அறிவிப்பாணை ரத்து

சென்னை: உதவி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக பழைய அரசாணையை ரத்து செய்து, புதிதாக 4 ஆயிரம் பேரை நியமனம் செய்வதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில்  அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர்கள் ஆசிரியர்  தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலம்  தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கடந்த 2019ம் ஆண்டில் 2,331 உதவி  பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப 2019ம் ஆண்டில் அறிவிப்பு  வெளியிடப்பட்டது.

இந்நிலையில் 4,000 கல்லூரி துணை பேராசிரியர்களை  நியமிப்பதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர்  பொன்முடி அறிவித்திருந்தார். அதன்படி தற்போது புதிதாக 4 ஆயிரம் பேரை  நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து 2019ம் ஆண்டு  வெளியிடப்பட்ட உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பான பழைய அறிவிப்பாணையை தமிழக  அரசு ரத்து செய்துள்ளது.

Tags : Appointment of Assistant Professors; Cancellation of old notification
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...