மின் கட்டணம், பால் விலை உயர்வு கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்; எடப்பாடி அறிவிப்பு

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 18 மாதங்களில் தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளது. அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அதிமுக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். அதன்படி வருகிற 9ம் தேதி (வெள்ளி) பேரூராட்சிகள், 13ம் தேதி (செவ்வாய்) நகராட்சிகள், மாநகராட்சிகள், 14ம் தேதி (புதன்) காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: