சென்னை: துபாய் விமானத்தில் இருந்து தங்கம், அமெரிக்க டாலர், வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த 41 வயது ஆண் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தினர். அவரது உடமைகளுக்குள் 450 கிராம் தங்க பசை மற்றும் 35 பார்சல்களில் விலை உயர்ந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ. 21.5 லட்சம்.