4வது முறையாக மாடு மீது மோதிய வந்தே பாரத்

காந்திநகர்: மாடு மீது வந்தே பாரத் ரயில் மோதியதில், தற்போது 4வது முறையாக குஜராத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் காந்திநகரில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயில், நேற்று முன்தினம் மாலை உத்வாடா மற்றும் வாபி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தை கடந்து சென்ற மாடு மீது ரயில் மோதியது. இதனால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் முன்பகுதி சேதமடைந்தது. சுமார் அரை மணி நேரத்திற்கு பின் மீண்டும் அந்த ரயில் இயக்கப்பட்டது. இதுகுறித்து மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் கூறுகையில், ‘உத்வாடா மற்றும் வாபி இடையே லெவல் கிராசிங் கேட் அருகில் தண்டவாளத்தில் சென்ற மாடு, ரயிலின் முன்பகுதியில் மோதியது’ என்றார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இதுவரை4வதுமுறையாக மாடு மீது மோதி விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: