தமிழ்நாட்டில் 2032-ம் ஆண்டுக்குள் 265 கோடி மரக்கன்றுகள் நடப்படும்: வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் அறிவிப்பு

சென்னை : 2032-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் 265 கோடி மரக்கன்றுகள் நடப்படும் என வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். வனப்பகுதியில் மரங்கள் இல்லாத இடங்களில் 165 கோடி மரக்கன்றுகள், வனத்திற்கு வெளியில் 160 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாண்டு 2.5 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது வரை 2.80 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் வனப் பரப்பை 33 சதவீதமாக உயர்த்திட, பசுமை தமிழக இயக்கத்தின் மூலம்   நடப்பாண்டு,  முதல் கட்டமாக  360 நாற்றங்கால்கள் மூலம் வளர்க்கப்பட்டுள்ள 2..80 கோடி மரக்கன்றுகள்  நடும் திட்டத்தை கடந்த 24.09.2022 அன்று தொடங்கி வைத்து சிறப்பித்தார்.

அதன் தொடர்ச்சியாக வேளாண் பெருமக்கள், தொழில் நிறுவனங்கள்,  மக்கள் நலச் சங்கங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தனி நபர்கள் மரக்கன்றுகளை எளிதாகப் பெறும் பொருட்டு, பசுமை தமிழகம் இயக்கத்தின் இணையதள முகவரியில் (www.greentnmission.com) பயன்பாட்டாளர்கள் தங்களது சுய விபரங்களை பதிவு செய்து, தங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த இயக்கத்தின் திட்டப்படி 10 ஆண்டுகளுக்குள் தமிழகத்தின் நிலப் பரப்பை 33 சதவீதமாக உயர்த்திட இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நடவு செய்யப்பட வேண்டிய மரக்கன்றுகளை வளர்க்கவும், நடவு செய்திடவும், முழுமையாக வளர்ந்திட குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் சரியாக திட்டமிட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

Related Stories: