சென்னை: ஒற்றை சாளர இணையம் மூலம் கட்டிடம் மற்றும் மனைப்பிரிவு வரைபடங்களுக்கு ஒப்புதல் அளிக்க வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசாணை எண்.56, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நாள்.18.04.2022-ல் ஒற்றை சாளர இணையம் மூலம் கட்டிடம் மற்றும் மனைப்பிரிவு வரைபடங்களுக்கு ஒப்புதல் அளிக்க முதல் கட்டமாக நகர் ஊரமைப்புத் துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு Golive அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 24.06.2022 முதல் மனைப்பிரிவு வரைபடத்திற்கான விண்ணப்பங்களுக்கும் மற்றும் 01.09.2022 முதல் கட்டிடம் மற்றும் நிலஉபயோக மாற்றத்திற்கான விண்ணப்பங்களுக்கும் ஒற்றை சாளர இணையதளம் மூலமாக ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.