9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது

பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சுமதி (35, பெயர் மாற்றம்) செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், 9ம் வகுப்பு படித்து வரும் எனது மகளை 2 நாட்களாக காணவில்லை. கடந்த 29ம் தேதி வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது காணவில்லை.

அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது எந்த தகவலும் இல்லை. 4 மாதத்திற்கு முன்பு இதேபோன்று வியாசர்பாடி பி கல்யாணபுரம் 3வது தெருவை சேர்ந்த இன்பா (எ) இன்பரசன் (22) என்பவருடன் சென்றார். இதையறிந்த நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் வீட்டுக்கு வந்தார்.

இம்முறை வரவில்லை’ என்று கூறியிருந்தார். இதையடுத்து பெரவள்ளூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் அம்பிகா வழக்கு பதிவு செய்து விசாரித்தார். ஆந்திராவில் இன்பரசனுடன் சுமதி இருப்பது தெரிந்தது. இருவரையும் சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். திருமண ஆசைக்காட்டி அழைத்து சென்றதும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போக்சோ சட்டத்தின் கீழ் இன்பரசன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: