பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சுமதி (35, பெயர் மாற்றம்) செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், 9ம் வகுப்பு படித்து வரும் எனது மகளை 2 நாட்களாக காணவில்லை. கடந்த 29ம் தேதி வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது காணவில்லை.
அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது எந்த தகவலும் இல்லை. 4 மாதத்திற்கு முன்பு இதேபோன்று வியாசர்பாடி பி கல்யாணபுரம் 3வது தெருவை சேர்ந்த இன்பா (எ) இன்பரசன் (22) என்பவருடன் சென்றார். இதையறிந்த நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் வீட்டுக்கு வந்தார்.