கோவை: கோவை மாவட்ட அதிமுக சார்பில், தார்ச்சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவானந்தாகாலனியில் இன்று உண்ணாவிரதம் நடந்தது. முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். இதில், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தார்ச்சாலை வசதி, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. கோவை மாவட்டம் அன்னூரில் தொழில்பூங்கா திட்டத்தை கைவிட்டு, விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.