சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.40,080க்கு விற்பனை

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது தினசரி சந்தை நிலவரத்தை பொருத்து காலை மற்றும் மாலை என்று இரு முறை நிர்ணயிக்கப்படுகிறது. முக்கிய பண்டிகை நாட்கள், திருமணங்கள் அதிகம் நடைபெறும் சுப முகூர்த்த மாதங்கள் மற்றும் நாட்கள் போன்ற சந்தர்ப்பங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கும். இது தவிர அதிக விற்பனை நடக்காத நாட்களில் தங்கத்தின் விலை குறைந்து காணப்படும்.

சென்னையில் ஆபரணத் தங்கம் மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.440 உயர்ந்து ரூ.40,080க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.55 ஏற்றம் கண்டு ரூ.5,010க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் அதிகரித்து ரூ.70.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: