மும்பை: மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் ஸ்தம்பித்ததால், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் 2வது டெர்மினலில் நேற்று திடீரென சர்வர் மெதுவாக இயங்க தொடங்கியது. சுமார் 1 மணிநேரம் இந்த பாதிப்பு நீடித்தது. இதனால் பயணம் செய்ய இருந்த பயணிகளை சோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சில விமானங்களின் நேரம் தள்ளி வைக்கப்பட்டது. பயணிகள் வரிசையில் காத்திருக்கும் புகைப்படங்கள் டிவிட்டரில் அதிகம் பகிரப்பட்டன.