பல்லாவரம்: பல்லாவரம், கண்ணபிரான் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்களும், மணிகண்டன் (20) என்ற மகனும் உள்ளனர். மகள்கள் படித்து வேலைக்கு செல்லும் நிலையில், மணிகண்டன் மட்டும் வேலைக்கு செல்லாமல் எப்போதும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூகவலைதளத்தில் வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடும் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அவரது தாய், ‘‘இப்படி எந்நேரமும் செல்போனில் மூழ்கியிருந்தால் எப்படி. வேலைக்கு சென்று எப்போது சம்பாதிக்க போகிறாய்,’’ என கண்டித்துள்ளார்.