ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடியில் படிப்பவர்கள் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்

சென்னை: ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடியில் படிப்பவர்கள் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளின் மிகாமல் உள்ள மாணவ, மாணவியருக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த கல்வி உதவித்தொகைக்கு 2022-2023ம் கல்வியாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள், ‘மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகலாம்.

மேலும் https://bcmbcmw.tn.gov.in, welfschemes.htm#scholarship.scheme என்ற இணையதள முகவரியிலிருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த 2022-2023-ம் நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ‘ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்புகட்டடம், 2வது தளம்,சேப்பாக்கம், சென்னை-05, தொலைபேசி எண்.044-29515942, மின்னஞ்சல்:tngovtiitscholarship@gmail.com’ என்ற முகவரிக்கு ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: