பெரம்பூர்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக கொளத்தூர் கிழக்கு பகுதி இளைஞர்அணி சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நலதிட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி கொளத்தூர் காமராஜ் நகரில் நடந்தது. கொளத்தூர் பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் தனசேகர் தலைமை வகித்தார். அமைச்சர் பி.கே சேகர்பாபு முன்னிலை வகித்தார். நலதிட்ட உதவிகளை வழங்கி பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. 26 லட்சம் லிட்டர் பால் தான் கடந்த ஆட்சியில் விற்பனை செய்யப்பட்டது.