சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். வருவாய், பேரிடர் மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் இருக்கும்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னை, ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து பரிசோதனை செய்தனர். இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு உள்ளதா என்பதற்கான ஆஞ்ஜியோ சோதனை நேற்று செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவ குழுவினர் அவரை கண்காணித்து வந்தனர். அவரது உடல்நிலை சீராக உள்ளதை தொடர்ந்து நேற்று மாலை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.