தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு முதல் முறையாக டிஜிட்டல் விருது

சென்னை: தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு முதல் முறையாக டிஜிட்டல் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு இதுவரை ரொக்கப் பரிசு தான் வழங்கப் பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது  முதல் முறையாக சிலைகளின் படத்தை டிஜிட்டல் முறையில் விருதாக தயாரித்து வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதன்படி சிறப்பாக பணியாற்றிய துணை சூப்பிரண்டுகள் முத்துராஜா, மோகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், ஏட்டு ரீகன் ஆகியோருக்கு டிஜிட்டல் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை டிஜிபி ஜெயந்த் முரளி, ஐ.ஜி.தினகரன் ஆகியோர் வழங்கினார்.

Related Stories: