வேலூர்: வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த கொண்டாரெட்டிபல்லி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(35), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளார். இதையடுத்து அரசு அறிவித்த வழிகாட்டுதல்படி கடந்த 2 மாதத்திற்கு முன் பயிர் காப்பீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பொன்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த மழையால் சிவக்குமார் மற்றும் அப்பகுதி நிலத்தில் தண்ணீர் ேதங்கி நெற்பயிர்கள் சேதமானது. இதுகுறித்து வேளாண் அதிகாரிகளுக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.