சென்னை : ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்றே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.50,000 பணத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்துக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இது ஆன்லைன் சூதாட்ட தடை நீக்கப்பட்ட பிறகு நிகழும் 34-வது தற்கொலை என்று குறிப்பிட்டுள்ளார்.