திருவண்ணாமலை: தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில், 1,433 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.40.89 கோடி பரிசுத்தொகையை முதல்வர் வழங்கியுள்ளார் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 63வது குடியரசு தின தடகளப் போட்டிகள் கடந்த 25ம் தேதி தொடங்கியது. 14 முதல் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, பல்வேறு போட்டிகள் நடந்தது. தடகளப் போட்டியின் நிறைவு விழா, திருவண்ணாமலையில் நேற்று மாலை நடந்தது. துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமை தாங்கினார்.