நத்மதாபுரம்: பாலிவுட் நடிகை ரவீன் டாண்டன் கடந்த சில தினங்களுக்கு முன் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அந்த வீடியோவில், மத்திய பிரதேச மாநிலம் சத்புரா புலிகள் காப்பகத்தின் உள்ள பசுமையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை ரவீனா ரசித்துக்கொண்டிருந்தார். சஃபாரி வாகனத்தில் சென்ற போது, புலி ஒன்று அவருக்கு அருகே வருவது போன்றும், அந்தப் புலி அவரை நோக்கி உறுமுவது போன்றும் அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பகத்திற்குள் ரவீன் மற்றும் அவரது குழுவினர் எப்படி சென்றனர்? இதுபோன்ற நபர்களால் வன உயிரனங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.