பாரதி நகர் மயான பூமி பராமரிப்பு பணி காரணமாக மூடல்

சென்னை: அடையாறு மண்டலத்திற்குட்பட்ட தரமணி, பாரதி நகர் மயான பூமியில் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், பொதுமக்கள் வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள இந்து மயானபூமியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், பகுதி-39, வார்டு-178க்குட்பட்ட தரமணி 100 அடி சாலை, பாரதி நகரில் உள்ள மயானபூமியில் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், 01.12.2022 முதல் 20.12.2022 வரை 20 நாட்களுக்கு மேற்கண்ட மயானபூமி இயங்காது.    எனவே, பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் 01.12.2022 முதல் 20.12.2022 ஆகிய நாட்களில் பொதுமக்கள் பகுதி-40, வார்டு-172க்குட்பட்ட வேளச்சேரி பிரதான சாலை, குருநானக் கல்லூரி அருகில் உள்ள இந்து மயானபூமியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories: