ஐதராபாத்: நடிகர் விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், ஐதராபாத்தில் உள்ள அமலாக்க இயக்குனரகம் முன்பு இன்று விஜய் தேவரகொண்டா ஆஜரானார். பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா, சினிமா இயக்குனர் பூரி ஜெகநாத், தயாரிப்பாளர் சார்மி கவுர் ஆகியோர், குறிப்பிட்ட சினிமா படம் தொடர்பாக அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (ஃபெமா) மீறியதாக கூறப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக மேற்கண்ட நபர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.