இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் எல்லையான பலுசிஸ்தானில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதலில் 10 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், ‘பலுசிஸ்தான் மாகாணத்தின் ஹோஷாப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திய போது, இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.