பாகிஸ்தானில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் எல்லையான பலுசிஸ்தானில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதலில் 10 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், ‘பலுசிஸ்தான் மாகாணத்தின் ஹோஷாப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திய போது, இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த பயங்கரவாதிகள் குவாதர்-ஹோஷாப் (எம்-8) சாலையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தியதில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; ஒரு பயங்கரவாதி காயமடைந்த நிலையில் பிடிபட்டார். இரண்டு பயங்கரவாதிகள் தப்பியோடினர்’ என்று கூறின.

Related Stories: