மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 63,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இடைநேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 621 புள்ளிகள் உயர்ந்து 63,303 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டது. வர்த்தக நேர முடிவில் 418 புள்ளிகள் உயர்வுடன் 63,100 புள்ளிகளில் சென்செக்ஸ் நிறைவடைந்தது. மகிந்திரா அன்ட் மகிந்திரா பங்கு 4 சதவீதம், அல்ட்ரா டெக் சிமென்ட் பங்கு 2 சதவீதம், இந்துஸ்தான் யுனிலீவர் 1.9 சதவீதம் விலை உயர்ந்தது. பவர் கிரீட், பார்த்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், டைட்டன், கோட்டக் வங்கி, எல் அண்ட் டி, ரிலையன்ஸ் பங்குகளும் விலை உயர்ந்து கைமாறின.