சென்னை: ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடத்திய சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியிடம் விளக்கம் கேட்டு மெட்ரிகுலேசன் இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பள்ளி நிர்வாகம் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது. அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் நவ.26,27ல் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.