குர்கிராம்: ஏரியை ஆக்கிரமித்து பண்ணை வீடுகளை கட்டி வசித்து வந்த பஞ்சாபி பாடகர் தலேர் மெஹந்தியின் வீடுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பிரபல பஞ்சாப் பாடகர் தலேர் மெஹந்தி, சோஹ்னா அடுத்த தம்தாமா ஏரிப்பகுதியில் அங்கீகரிக்கப்படாத மூன்று பண்ணை வீடுகளை கட்டி வசித்து வருகிறார். சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட மூன்று பண்ணை வீடுகளுக்கும், நகர திட்டமிடல் துறையின் அதிகாரிகள் சீல் வைத்தனர்.