புதுச்சேரி: புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. காமாட்சி அம்மன் கோயில் வீதியில் நடை பயிற்சி மேற்கொண்ட போது மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. யானை மறைவால் மணக்குள விநாயகர் கோயில் நடை சாத்தப்பட்டது. யானை லட்சுமியின் மறைவை தாளாமல் புதுச்சேரி மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.